அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் - திருமுருகாற்றுப்படை

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன் .

விளக்கம்:
'முருகா' என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் 
போது ஆறுமுகம் தோன்றும். கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது 'அஞ்சேல்'‌ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும்.

- நக்கீரர்

No comments